லயப்பன் அருள் பல அருள் புலியை வாகனமாகக் கொண்டவன்தவக்கோலத்தில் சபரிமலையில் அருள் பாலித்து வரும் அருட்கடல்மகிஷி என்ற அரக்கியை வதம் அவதரித்தவன் ஐயப்பன்.
ஐயப்பன் வரலாறு
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிசி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். மோகினியாக இருந்த விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். குழந்தையாக பிறந்த ஐயப்பனை ஒரு மரத்தடியில் விட்டு விட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் இருக்குமல்லவா?
பக்திமானான பந்தள மகாராஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொருளும் குழந்தையை அங்கே விட்டுச் சென்றனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா? என மகிழ்ந்து அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
தெய்வாம்சம் பொருந்திய குழந்தை
குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள் ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடலாம் என்று முடிவு செய்தனர்.
மணிகண்டனை அன்போடு - பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர். அப்பொழுது சில புல்லுருவிகள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள். ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவனுக்குத்தான் வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
வில்லாளிவீரன்
வில்லாளிவீரன் தீய போதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள் அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை, தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிசிஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை.
அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனார்கள்.அரசி தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள் ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
தவக்கோலத்தில்
மேலும் அவதார காரணம் பூர்த்தி பெற்ற தால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார் அருள் தரும் ஐயப்பன். இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இருகால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாராஜா ஒரு முறை வந்த போது - ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால், எழ முயன்றார். அப்போது, இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்று தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி தூக்கி போட்டார் - பந்தள மகாராஜா அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
மண்டலபூஜை, மகரஜோதி
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5வது நாளன்று நடை சார்த்தப்படும், ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை. .
நாகராஜா சன்னதி
சாதாரணமாக எல்லா ஆலயங்களிலும் அந்த கோவில் முறைப்படி நாகராஜாவை ப்ரதிஷ்டை செய்வார்கள். ஆலப்புழை மன்னர் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற நாகப்ரதிஷ்டை , ஆதிசேஷனுடைய அவதார ஷேத்திரமாகும். இது கேரளத்தில் சர்ப்ப காவு என்று சொல்லப்படுகிறது.
இதே முறையில் இந்த ஆலயத்தில் நாகராஜாவை நேராக ஆவாஹனம் செய்து ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். சென்னை மாநகரத்தில் வேறு எங்கும் இது மாதிரியான ப்ரதிஷ்டை கிடையாது.
ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதியான ஸ்ரீ நாக ராஜாவை ப்ரதிமாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று தாந்த்ரீக முறையில் பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பாலாபிஷேகம்
இந்த பூஜையில் கலந்து கொண்டு பாலாபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும். ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும். தடைபெற்ற திருமணங்கள் விரைவில் நிறைவேறும்.
சருமவியாதிகள் குறையு மென்பதால் பக்த கோடிகள் ஆயில்ய நட்சத்திர பூஜையில் கலந்து கொண்டு பலனடைந்து வருகிறார்கள். இதன் பலனை எல்லா பக்தர்களும் பெற வேண்டும் என்பது டிரஸ்டின் விருப்பம். இந்த சன்னதியில் ஸ்ரீநாகராஜா, நாகராணி சமேதராக காட்சி அளிக்கிறார். வேம்பு, வில்வ, அரச மரங்களின் அடியில் அமர்ந்து அருள் பாலித்துவருகின்றார்.